×

₹43 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

அரூர், பிப்.29: அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமை கால்நடை சந்தை நடக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடு, எருமை மாடு, இறைச்சி மாடு, நாட்டுக்கோழி, சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வெளிமாநிலம் மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்நடைகனை வாங்க வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் மாடுகள் ₹6,500 முதல் ₹48,500 வரையும், ஆடுகள் ₹5,500 முதல் ₹9,700 வரை ₹43 லட்சத்திற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ₹43 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Aroor ,Pluthiyur ,Gopinathambatti Kootrodu ,Dharmapuri ,Krishnagiri ,Salem ,Namakkal ,Tiruvannamalai ,
× RELATED 125 மூட்டை மஞ்சள் ₹12.5 லட்சத்திற்கு ஏலம்